புதுவை மாநிலம் உப்பளம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் கொசுகளின் தொல்லையால் பொதுமக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு வருவதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான பணியினை தொடர்ந்து தொகுதியில் கொசுமருந்து தெளித்து வரும் பணியினை மேற்கொண்டு வருகிறார். அதில் மேலும் ஒரு கட்டமாக உப்பனாறுவாய்க்கால் தூர்வார கோரி பொதுப்பணி துறை தலைமைப் பொறியாளரிடம் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் கோரிக்கை வைத்தார், அதன் தொடர்ச்சியாக இன்று வாணரப்பேட்டை சார்ந்த எல்லை அம்மன் கோயில் மற்றும் காளியம்மன் கோயில் தோப்பு அருகாமையில் நீர்ப்பாசன பிரிவு துணைப் பொறியாளர் சம்மந்தம அவர்களுடன் சென்று உப்பனாறு வாய்க்காலை அனிபால் கென்னடி எம்எல்ஏ பார்வையிட்டு பின்பு ஹிட்டாச்சி இயந்திரம் வைத்து வாய்க்காலில் உள்ள பிளாஸ்டிக் குப்பை மண் போன்றவற்றை தூர்வாரும் இயந்திரம்கொண்டு தூய்மைப்பணியாளர்கள் மூலம் தூர்வாரி சீரமைத்தார், உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், இளைஞர் அணி ராஜி, கலை மற்றும் இலக்கியப் பகுத்தறிவு சந்திரன், கிளை செயலாளர்கள் மற்றும் கழக சகோதரர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *