கோவை முல்லை தற்காப்பு கலை மற்றும் பயிற்சி கழகத்தை சேர்ந்த மைதிலி என்ற பள்ளி மாணவி தீப்பந்தம் சுற்றிய இரட்டை சிலம்பத்தை தொடர்ந்து மூன்று மணி நேரம் சுழற்றி உலக சாதனை

கோவை சின்ன வேடம்பட்டி மற்றும் சேரன்மாநகர் பகுதியிலுள்ள முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் ஐந்து வயது முதலான மாணவ மாணவிகளுக்கு தமிழக பாரம்பரிய கலைகளான சிலம்பம் , அடிமுறை , வேல்கம்பு , வாள்வீச்சு , வளரி மான்கொம்பு , சுருள்வாள் , வாள்வீச்சு,போன்ற , பயிற்சிகள் பாரம்பரியம் மாறாமல் கற்றுத் தரப்பட்டு வருகிறது.மேலும் இங்கு நன்கு பயிற்சி பெற்ற மாணவ,மாணவிகள் பலர் உலக சாதனையாளர்களாகவும் ஜொலித்து வருகின்றனர். இந்நிலையில் இதே பயிற்சி கழகத்தில், பயிற்சி பெற்று வரும் சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் குமார்,சத்யா ஆகியோரின் மகளான மைதிலி தீப்பந்தம் சுற்றிய இரட்டை சிலம்பத்தை தொடர்ந்து மூன்று மணி நேரம் சுழற்றி உலக சாதனை படைத்துள்ளார்.சர்வதேச மகளிர் மற்றும் குழந்தைகள் அறிவியல் தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மைதிலி செய்த இந்த சாதனை,இந்தியா உலக சாதனை,அமெரிக்கன் உலக சாதனை,யூரோப்பியன் உலக சாதனை என மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது.. சாதனை சிறுமிக்கு இந்தியா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ்ராஜ் கோப்பை,பதக்கம்,மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.. சாதனை சிறுமி மைதலிக்கு இந்தியா உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவரான சதாம் ஹீசேன் பாராட்டுகளை தெரிவித்தார்…. முல்லை தற்காப்பு கலை துணை பயிற்சியாளர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *