புதுச்சேரிமாநிலம் ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் மெயின்ரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பாபையா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் விக்னேஷ் கந்தசாமி, ஏம்பலம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பாலாஜி, கிருமாம்பாக்கம் செந்தில்குமார், விசுவநாதன், கோவிந்த நாயுடு. செல்வம், மகாதேவன், அய்யப்பதாஸ், சுகுமார், செல்வகுமார், ஏழுமலை, கிருமாம்பாக்கம்பேட்
பாலு, செல்வம், துரை, சிவா, கணேசன், சிவசங்கர், ஜெயவேலன் பிள்ளையார் குப்பம் பகுதியை சேர்ந்த சுந்தரலிங்கம், ராமு, நமச்சிவாயம், சக்திவேல், வம்பாபேட் பூபாலன், வெங்கடேசன், அஞ்சப்புலி, ஆதிங்கப்பட்டு தங்கராசு, ராஜாராமன், ஆறுமுகம், கோதண்டராமன், விஜெ. கோவிந்தன், பின்னாச்சிக்குப்பம் எல்லப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்