இந்திய சாதனைப் புத்தகத்தின் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சிக்காக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறையை வலியுறுத்தும் விதமாக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இடைவிடாமல் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி லாசுப்பேட்டை தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து சுமார் 3000 பேர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் ராம் சிங் நகர் எம்ஜிஆர் வீதியில் உள்ள மருது சகோதரர்கள் வீர சிலம்பாட்ட குழுவினர் இந்த ஆண்டு கலைமாமணி விருது பெற்றஅதன் தலைவர் வேல்முருகன் மற்றும் பயிற்சி ஆசிரியர் மற்றும் செயலாளர் கலை மாமணி ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு வகையான தற்காப்பு பயிற்சி முறையினை ஒரு மணி நேரம் ஒரு நிமிடம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி உலக சாதனை புரிந்து அதற்கான சான்றிதழ் மற்றும் மடல்களை பெற்றனர்.
இவர்கள் அனைவரும், மருது சகோதரர்கள் வீர சிலம்பாட்ட குழுவின் கௌரவ தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி இடம் வாழ்த்து பெறும் நிகழ்ச்சி ஆர் கே நகர் செட்டிகுளம் பகுதியில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்துரை வழங்கி பயிற்சி ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் உலக சாதனை புரிந்த மாணவர்கள் அனைவரையும் பாராட்டி சான்றிதழ்களையும் மெடல்களையும் வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் தலைவர் கலைமாமணி வேல்முருகன் துணைத்தலைவர் தனஞ்செயன் செயலாளர் கலைமாமணி ராஜேந்திரன் துணைச் செயலாளர் சிவலிங்கம் பொருளாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அப்பகுதி என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.