பத்து ரூபாய் இயக்கத்தின் தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு சார்பில் தகவல் பெறும் உரிமை குறித்த விழிப்புணர் பயிற்சி வகுப்பு அரியாங்குப்பம் மேரி வீதியில் உள்ள தனியார் வரவேற்பு ஹாலில் நடைபெற்றது. இயக்கத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் விஸ்வராஜ் தலைமை ஏற்று தலைமை பயிற்சியாளராகவும் பாதிக்கப்பட்டோர் கழகத்தின் பொதுச்செயலாளர் அருப்புக்கோட்டை கணேசன் மற்றும் பாண்டிச்சேரி நிலம் உங்கள் எதிர்காலம் நூலாசிரியர் பரஞ்சோதி பாண்டியன் ஆகியோர் பொதுமக்களுக்கு சிறப்பான பயிற்சியினை வழங்கினர் சிறப்பு அழைப்பாளராக அரியாங்குப்பம் திமுக சங்கர் கலந்து கொண்டார்.பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் டெஸ்மா வீரபாண்டியன் பயிற்சியாளர்களை அறிமுகப்படுத்தி பயிற்சியினை துவக்கி வைத்தார். பத்து ரூபாய் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் அரியாங்குப்பம் சிவராமன் ரகு என்கிற ரகுநாதன் சிலார் மைதீன் முருகையன் ஜோதி பாசு மற்றும் ஜெயபாலன் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினையும் உணவு உபசரிப்பணியும் செய்திருந்தனர். இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கேட்டறிந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *