அதிமுக–பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் இயற்கைக்கு எதிரான கூட்டணி என்றும், அது மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி என்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வபெருந்தகை கடுமையாக விமர்சித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் செல்வப் பெருந்தகை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில்
கூறியதாவது:

தமிழ்நாட்டில் அதிமுக–பாஜக கூட்டணி என்பது பொருந்தாத கூட்டணி. ஆரம்பத்திலிருந்தே இது குறித்து நாங்கள் கூறி வருகிறோம். மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த கூட்டணி தற்போது “மூழ்கும் கப்பல்” போன்றதாக உள்ளது. அந்த கப்பல் மூழ்கப்போகிறது என்பது தெரியாமல் சிலர் அதில் ஏறிவிட்டார்கள். தற்போது அவர்களுக்கு இறங்குவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

மேலும் , இந்தியா கூட்டணி என்பது திமுக தலைமையில் உள்ள வலிமையான கூட்டணி. இந்த கூட்டணி தமிழ்நாட்டு மக்களை தலைநிமிரச் செய்யும் கூட்டணி. ஆனால் அதிமுக–பாஜக கூட்டணி தமிழ்நாட்டு மக்களை தலைகுனியச் செய்யும் கூட்டணி.

தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தையும் டெல்லியில் உள்ள ஒன்றிய அரசு முன் அடகு வைப்பது போல அதிமுக செயல்படுகிறது என்றும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறும் இடங்களில் கையொப்பமிட்டு தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுக்கிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சி தனியாக இருக்கும் தானா அல்லது பாஜக அதிமுகவை விழுங்கிவிடுமா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது என்றும் செல்வபெருந்தகை தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *