பெரியகுளம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடத்தை திறந்து வைத்த எம் எல் ஏ
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெரியகுளம் ஊராட்சி தொகுதிக்குட்பட்ட, பெரியகுளம் ஒன்றியம், எண்டப்புளி. புதுப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கூடுதல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் குத்துவிளக்கு ஏற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்க்கு புதிய கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் எல்.எம்.பாண்டியன் எண்டப்புளி புதுப்பட்டி ஊராட்சி செயலாளர் ஜெயபாண்டி மற்றும் சுகாதாரத்துறை அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்