திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்,
காரைக்கால் – சென்னை புகைவண்டியை (கம்பன் எக்ஸ்பிரஸ்) பேரளம் வழியாக இயக்க ரயில்வே நிர்வாகம் தீர்மானித்ததை கண்டித்து அனைத்து சங்கங்களின்
கூட்டு கூட்டம் திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கத்தின் தலைவர் CA, பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது, மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டு, அதன் பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால், எதிர்வரும், 19-03_2026
வியாழக்கிழமை
அன்று முழு கடை அடைப்பு செய்து, அனைத்து சங்கங்கள், அனைத்து கட்சிகள், அனைத்து பொது சேவை தொண்டு நிறுவனங்கள், எல்லோரும் இணைந்து மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முடிவு செய்ததாக பிளாட்டினம் விழா கண்ட திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கத்தின் தலைவர் CA, பாலமுருகன் தெரிவித்தார்,