புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் வரும் ஜனவரி 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெரும் கார்னிவல் விழா சம்பந்தமான ஆலோசனை கூட்டம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் திரு.ட. முகம்மது மன்சூர் அவர்கள் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வு நான்கு நாட்கள் நடைபெறும் என்றும் நிகழ்வுகள் உள்விளையாட்டு அரங்கிலும் சில போட்டிகள் கடற்கரையிலும் நடைபெரும் என்றும் இந்நிகழ்வில் Road Show, Flower Show, Dog Show, Food Festival மற்றும் பீச் வாலிபால் போட்டி, கபடிப்போட்டி, படகு போட்டி, ரேக்ளாரேஸ் போட்டி, மாரத்தான் போட்டி மற்றும் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் நடைபெறும் என இந்நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில் துணை மாவட்ட ஆட்சியர் திரு.M. ஆதர்ஷ், துனை ஆட்சியர் திரு. S.பாஸ்கரன், பொதுப்பணித்து கண்காணிப்பு பொறியாளர் திரு. ராஜசேகரன் மற்றும் பொதுப்பணித்துறை, மின்துறை, கல்வித்துறை, மீன்வளத்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை, போக்குவரத்து துறை, நலவழித்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றார்கள். இந்நிகழ்வில் மேதகு துனை நிலை ஆளுநர் மாண்புமிகு முதல்வர், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என ஆட்சியர் தெரிவித்தார்கள். மேலும் இந்நிகழ்வில் சுகிசிவம் மற்றும் லஷ்மன் சுருதி போன்றவர்களின் பொழுது போக்கு அம்சங்கள் இடம்பெறும் எனவும் ஆட்சியர் கூறினார்கள்.