மயிலாடுதுறை மாவட்டம் நீடூரைச் சேர்ந்த கார்த்திக், திருச்சியிலிருந்து மதுரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த மற்றொரு பைக் மோதியதில் கார்த்திக் தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது, சாலையில் சென்ற பேருந்து ஒன்று அவரது உடல் மீது ஏறி இறங்கியதில், உடல் நசுங்கி கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்னை
க.மாரிமுத்து.