இன்று சர்வதேச வேட்டி தினம்..!
தமிழனின் அடையாளம் என்பதை உணர்ந்து, வேட்டி தொடர்ந்து அணிவதில் ஆண்கள் ஆர்வம் காட்ட வேண்டும். வேட்டி இது தமிழ் ஆண்கள் அணியும் ஆடைகளின் பாரம்பரிய அடையாளம். ஆனால் அந்த பாரம்பரியம் இப்போது அடையாளம் தெரியாமல் போய்விட்டது. உலக பாரம்பரியத்தை பறைசாற்றும் ‘யுனெஸ்கோ’ நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச வேட்டி தினம் ஜனவரி 6 கொண்டாடப்படும் என்று அறிவித்தது. அதன் பிறகு தான் இன்றைய இளைஞர்களுக்கு வேட்டியின் மகத்துவம் தெரியத்தொடங்கியது. ஆனாலும், வேட்டியை முறையாக கட்டி பழக்கம் இல்லாததால் அதில் பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வம் காட்டவில்லை. சொல்லப்போனால் அரசியல்வாதிகளின் அடையாளமாக மட்டுமே வேட்டி இருந்து வருகிறது.
P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
மாநில துணைத்தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு