தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம்குண்டடம் உப்பாறு கள்ளிவலசு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மஹா கும்பாபிஷேகப் பெரு விழா.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டடம் அருகே அமைந்துள்ள 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகம் கள்ளி வலசு செப்பியவர் குலத்தாருக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது
இன்று தைப்பூசத்தை முன்னிட்டு தை மாதம் 18ம் நாள் ஞாயிற்றுக்கிழமை குடமுழக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது .
நிகழ்வில் ஸ்ரீ கற்பக விநாயகர் முதலான பரிவார தெய்வங்கள் புடைசூழ ஸ்ரீ வீரமாத்தி அம்மன். ஸ்ரீ பேச்சியம்மன். ஸ்ரீ கருப்பண்ண சுவாமி மற்றும் ஸ்ரீ பாவாடைரயன் மற்றும் மூன்று நிலை ராஜகோபுரம் திரு சன்னதியுடன் திகழ்ந்து நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன். மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ். குண்டடம் மேற்கு ஒன்றியம் எஸ். சந்திரசேகர் இந்துசமய அறநிலைத்துறை தாராபுரம் சி. கீதா ஆய்வர். தலைவர் தாராபுரம் கணேசன். திருப்பணி தலைவர் எஸ்.ராமமூர்த்தி. பரம்பரை அறக்க காவலர் வி. கௌரி சங்கர் பரம்பரை அறங்காவலர் மற்றும் 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகம் சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.