ம.சங்கரநாராயணன், செய்தியாளர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம் செய்தார் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திரை உலக பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில் திசையன்விளையில் படம் பிடிப்பிற்காக யோகி பாபு விமானம் மூலமாக தூத்துக்குடி வந்தடைந்தார்,இந்நிலையில் உலக புகழ் பெற்ற கடற்கரை ஸ்தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.கோவில் கடற்கரையில் கடல் அன்னையை வணங்கி சுவாமி தரிசனம் செய்ய சென்றார்.
திருக்கோவிலில் உள்ளே மூலவர் சன்னதி.சண்முகர் சன்னதி,பெருமாள் சன்னதி,தட்சிணாமூர்த்தி,சூரசம்கார மூர்த்தி,விநாயகப் பெருமாள் சன்னதி ஆகியவற்றை தரிசனம் செய்தார்,
சுவாமி தரிசனம் செய்து வெளியே வந்த யோகி பாபுவிடம் ரசிகர்கள் உற்சாகத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.அதன் பின்னர் திருக்கோவில் நுழைவாயிலில் அமைந்துள்ள கடையில் சுவாமி முருகன் புகைப்படம்,பஞ்சாமிர்தம்,பிரசாதம் ஆகியவற்றை வாங்கி ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லி விடைபெற்றார்.