வலங்கைமானில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் திறந்து வைத்தார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கு இணங்க, கோடைக்கால நீர் மோர் பந்தலை தமிழக முன்னாள் அமைச்சரும், நன்னில சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், கழக அமைப்பு செயலாளருமான ஆர். காமராஜ் திறந்து வைத்து, நீர்மோர், தர்பூசணி பழம், பனம் நுங்கு, வெள்ளரிப்பிஞ்சு, இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அனைவருக்கும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான குமார மங்கலம் கே.சங்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் யூ. இளவரசன், நகர செயலாளர் சா. குணசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆலங்குடி ராணி துரைராஜ், வலங்கைமான் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் மாஸ்டர் எஸ். ஜெயபால், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஜெய.இளங்கோவன், மாவட்ட பிரதிநிதிகள் ஆர்.ஜி.பாலா, எஸ். மூர்த்தி, நகர அவைத் தலைவர் ரத்தின குமார், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைத் தலைவர் வக்கீல் ராஜராஜ சோழன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.