கோடை வெயில் காரணமாக போக்குவரத்து காவலர்களுக்கு கூலிங் கிளாஸ் வழங்கிய மாநகராட்சி ஒப்பந்ததாரர்
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் , மூங்கில் மண்டபம் சிக்னல் ஆகிய பகுதிகளில் பணிபுரியும் போக்குவரத்து துறை காவலர்களுக்கு கோடை வெயிலின் கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி வரும் காஞ்சிபுரம் மாநகர போக்குவரத்து துறை காவலர்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க 17 காவலர்களுக்கு காஞ்சிபுரம் மாநகராட்சி ஒப்பந்ததாரர் கே.சுடர்மணி சன் கூலிங் கிளாஸ் வழங்கி கௌரவித்தார் .
உடன் போக்குவரத்து துறை சிறப்பு காவல் ஆய்வாளர் டி.சுரேஷ் , போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜ் பாய் மற்றும் காவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.