வேலூரில், தொழிலாளர்கள் தினம் மற்றும் தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்கமாளிகை நிர்வாக இயக்குனர்கள் பிறந்தநாள் முன்னிட்டு பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் ரத்ததானம் வழங்கினார்.

வேலூர் மாவட்டம், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், தொழிலாளர்கள் தினம் மற்றும் தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்கமாளிகை நிர்வாக இயக்குனர்கள் பிறந்தநாள் முன்னிட்டு பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை மேலாளர் விநாயகம் தலைமையில் ரத்ததானம் வழங்கப்பட்டது.

மே 1, தொழிலாளர் தினம் முன்னிட்டு தொழிலாளர்களின் உழைப்பிற்கு வீரவணக்கம் செலுத்தும் வகையிலும் இயக்குனர்கள் ஸ்ரீ கே.சிவலிங்கம் மற்றும் ஸ்ரீ என்.கே.நந்தகோபால் ஆகியோரின் பிறந்தநாள் மற்றும் தொழிலாளர் தினம் முன்னிட்டு 30-04-2024 அன்று 11வது வருடமாக தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று மருத்துவமனையில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிக்கு ரத்தம் தேவை என்றால் உடனடியாக, இந்த அவசர நிலை காலத்தில் ரத்தம் வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வோடு ரத்த தானம் வழங்கினர். விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கியது வேலூர் மாவட்ட பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி, இவர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மரு. பி.பாஸ்கரன், நந்தகுமார், ரத்த வங்கி ஆலோசகர் மற்றும் தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை மேலாளர்கள் மற்றும் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டு இந்த ரத்ததானம் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *