தூத்துக்குடி மாநகராட்சியில்ரூ.ஒரு கோடி உபரி வருவாயுடன் கூடிய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.தூத்துக்குடி மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொட மேயர் ஜெகன் தலைமையில் தொடங்கியது. மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்டவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்ட தொடக்கத்தில் 2023-24 ஆம் ஆண்டின் உத்தேச வரவு செலவு அறிக்கை மேயர் வெளியிட்டார். தொடர்ந்து அவர் அறிக்கை குறித்து விளக்கினார். இந்த ஆண்டு ஒரு கோடியை 13 லட்ச ரூபாய் உபரியாக வருமானம் வரும், குடிநீர் மற்றும் வடிகால் நிதியில் 7 கோடி 55 லட்ச ரூபாய் உபரியாக வருமானம் வரும் எனவும், கல்வி நிதியில் ஒரு கோடியே 76 லட்ச ரூபாய் உபரியாக வருமானம் வரும் எனவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

நடப்பாண்டில் சொத்து வரி மற்றும் வரியில்லா இடங்கள் மூலமாக 31 கோடியே 64 லட்ச ரூபாய் அரசு சுழல் நிதியாக 6 கோடி 90 லட்சம் அரசு மானியமாக 84 கோடி ரூபாய் மூலமாக 24 கோடி ரூபாய் என மொத்தம் 148 கோடி ரூபாய் வருமானம் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். தொடர்ந்து நடப்பு ஆண்டிற்கான சாலை கட்டிடங்கள் இதர பராமரிப்பு செலவினங்களுக்காக 8 கோடியே 15 லட்சம் ரூபாய் இயக்க செலவினங்களுக்காக 47 கோடியை ரூபாய் சம்பளம் ஓய்வூதியம் உள்ளிட்ட செலவுகளுக்காக 67 கோடி ரூபாய் இதர செலவுகளுக்காக 23 கோடியே 78 லட்ச ரூபாய் என மொத்தம் 147 கோடி ரூபாய் செலவாகும் என உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *