எல். தரணி பாபு ராசிபுரம் நாமக்கல் மாவட்டம்
ராசிபுரம் கவரைத் தெருவில் உள்ள பஜனை மடத்தில் ஸ்ரீராம நவமி விழா: ஆண்கள் மட்டுமே கலந்துகொண்ட கோலாட்டம். ஆடுபாம்பே பாடலுக்கு பாம்பு நடனம் ஆடிய பக்தர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கவரைத் தெருவில் உள்ள நாயுடு சமூகத்தார் ராமர் பஜனை மடத்தில் ஸ்ரீராம நவமி விழா பூஜை கோலத்துடன் தொடங்கியது.
பஜனை மடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீராமர் சீதா தேவி உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது, பாடல் குழுவினர் ஸ்ரீராமர் குறித்த பாடல்களை பாடினர்.
தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்ட அனைவரும் ராமர் மற்றும் பல்வேறு சாமி பாடல்கள் பாடி மகிழ்ந்தனர்.
இதைத் தொடர்ந்து சிறுவர் முதல் பெரியவர் வரை ஆண்கள் மட்டுமே பலர் கலந்துகொண்ட கோலாட்டம் சிறப்பாக நடந்தது. மேலும், ஆடும் பாம்பே பாடலுக்கு பக்தர் ஒருவர் சிறப்பாக பாம்பு நடனமாடினார்.
தினந்தோறும் பல்வேறு கட்டளைதாரர்களால் அபிஷேகம் ஆராதனை பெறும் என நிர்வாக குழுவினர் தெரிவித்தனர்.
ஏப்ரல் 7ம் தேதி ஸ்ரீராமர் – சீதா தேவிக்கு திருக்கல்யாணம் விமர்சியாக நடக்கிறது. ஏப்ரல் 9ம் தேதி மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவு பெறுகிறது