மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வெள்ளலூர், கோட்டநத்தம்பட்டி, அம்பலகாரன்பட்டி,உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி ஊராட்சி ஆகிய கிளை சங்கங்களின் பால் உற்பத்தியாளர்களின் சார்பில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையிலும் தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் கூலிபட்டி சர்ச்சில் மற்றும் துணைத் தலைவர் வெள்ளலூர் ராஜா முன்னிலையிலும், கோட்டநத்தம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கந்தப்பன் மற்றும் பல்வேறு கிளைகளின் சங்க தலைவர்கள் கலந்து கொண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் அடக்கிவீரணன் ஆகியோர் விளக்கவுரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு தொடர்ந்து கட்டுபடியான விலை கிடைக்கவில்லை.மாட்டு தீவன விலை உயர்வதும், பராமரிப்பு செலவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆகவே தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பால் லிட்டருக்கு ரூபாய் 40 விலை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியும் தீவன மூட்டை ஒன்றுக்கு ரூ200 மானியத்தொகையை திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.