தென்காசி நகரில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் நெரிசல்களை கண்காணிக்கவும், குற்ற செயல்களை கண்காணிக்கவும், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு ஏற்பாட்டில் தென்காசி பழைய பேருந்து நிலையம், யானைப்பாலம் சிக்னல், தங்கப்பாண்டி மருத்துவமனை சிக்னல், கீழரதவீதி, இலஞ்சி சந்திப்பு உள்ளிட்ட 6 இடங்களில் 22 அதிநவீன கண்காணிப்பு காமிராகள் தனியார் பங்களிப்புடன் பொறுத்தப்பட்டுள்ளது. அதன் தொடக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்குதென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் ஐபிஎஸ் தலைமை வகித்து, கண்காணிப்பு காமிராவின் செயல்பாடுகளை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, பொதுமக்கள் சாலை விதிகளை கடைபிடித்து வாகனங்களை
ஓட்ட வேண்டும் என்றும், இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அணிந்தும், இரண்டு நபர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும், போக்குவரத்து காவலர்கள் கூறும் சாலை பாதுகாப்பு குறித்த அறிவுரைகளை கேட்டு சாலைகளில் கவனத்துடன் ஆபத்தில்லாமல் பயணம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் சாலையில் சென்ற இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரகங்களை வழங்கினார்.

மேலும் இருசக்கர வாகன ஹெட்லைட்டுகளின் நடுவில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நாகசங்கர், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஹரிகரன், துரைராஜ், பரமசிவன், போக்குவரத்து காவலர்கள் தங்கராஜ், வசந்த், வசந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தென்காசி நகரில் கண்காணிப்பு காமிரா பொறுத்தும் பணியினையும், விழா ஏற்பாடுகளையும் த்ரி ஸ்டார் டிஜிட்டல் சர்வீஸ் நிறுவனம் சார்பில் அதன் உரிமையாளர் முத்துக்குமார் செய்திருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *