காங்கிரஸ் தலைவர்கள் உருவான ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டதற்கு தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.தூத்துக்குடி மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டம் இன்று மேயர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. மேயர் இந்த ஆண்டுக்கான வரவு செலவு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.அதனை தொடர்ந்து மாநகராட்சியில் மேற்கொள்ள பல வளர்ச்சித் திட்டங்களை அவர் எடுத்துக் கூறினார். அதனுடைய கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட உறுப்பினர்கள் சந்திரபோஸ், எடிண்டா, கற்பக கனி ஆகியோர் கருப்பு உடையில் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.கூட்டம் நடந்து கொண்டிருந்த போது காங்கிரஸ் கட்சி கொறடா சந்திரபோஸ் எழுந்து வந்து ராகுல் காந்தி பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா செய்ய அனுமதி வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேயர் கூட்ட அரங்கில் தர்ணா நடத்துவதற்கு அனுமதி கிடையாது என அனுமதி மறுத்தார். நடத்துவதாக இருந்தால் மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே நடத்திக் கொள்ளுங்கள் என்று மேயர் அனுமதி மறுத்தார்.இதனை தொடர்ந்து இந்த மூன்று காங்கிரஸ் உறுப்பினர்களும் ராகுல் காந்தி பதவி பறிப்பிற்கு எங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என கோஷங்கள் எழுப்பி பின்னர் இருக்கையில் சென்று அமர்ந்தனர். மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்டவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.