கோவை மாவட்டம் இடையர்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ தாய் மூகாம்பிகை ஆலயத்தில், ஆதி சைவ சிவாச்சாரியார்களின் குலகுருவாக போற்றப்படும் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனாரின் ஆடி சுவாதி குருபூஜை விழா புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
விநாயகர் பூஜையுடன் தொடங்கி தொடர்ந்து விசேஷ ஹோமம், அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து தேரில் அம்மன் வலம் வந்து அருள்பாலித்தார்.
கோவை மாவட்ட ஆதி சைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கலிபோர்னியா சுவாமிநாதன் சிவாச்சாரியாரின் ஆலோசனையின்படி, மாவட்டத் தலைவர் மணிகண்ட சிவாச்சாரியார் தலைமையில் விழா நடைபெற்றது.
நிகழ்வில் செல்வம் சிவாச்சாரியார், கண்ணன் சிவாச்சாரியார், பாலசுப்பிரமணியம் சிவாச்சாரியார், சோமசுந்தரேச சிவாச்சாரியார், ஞானஸ்கந்தன் சிவாச்சாரியார், நடராஜன் சிவாச்சாரியார், விஸ்வநாதன் சிவாச்சாரியார், சங்கர் சிவாச்சாரியார், சிவக்குமார் சிவாச்சாரியார், ஐயப்பன் சிவம், வெங்கடேஷ் சிவம், ஹரீஷ் சிவம், ராஜேஷ் சிவம், ஸ்ரீநாத் சிவம், வேதநாயகி, கோமதி, பூர்ணிமா, உஷா, பிரபாவதி, ரம்யா, சுந்தரி, உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், கோவை மாவட்ட நிர்வாகிகள், சிவஸ்திரிகள், மற்றும் அனைத்து கோவில்களில் இருந்து ஏராளமான ஆதி சைவ சிவாச்சாரியார்கள் பங்கேற்று குருபூஜை விழாவை சிறப்பித்தனர்.இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அருள் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.