தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ள பணியாளர்களின் அறிமுக கூட்டம் ஆலங்குளம் ஒன்றிய அலுவவலகத்தில் பெருந்தலைவர் எம்.திவ்யா மணிகண்டன் தலைமையில் நடைப்பெற்றது
ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகணபதி, மகளிர் திட்டம் வட்டார மேற்பார்வையாளர் தங்கமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்வில் காலை உணவு திட்டத்தின் கீழ்
தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களிடயே எம் திவ்யா மணிகண்டன் கலந்துரையாடினார் .அதன் பின்பு அனைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நிகழ்வில் மகளிர் சுய உதவிக்குழுவை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.