தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் தென்னையில் பூச்சி நோய் மேலாண்மை முனைப்பு இயக்கம் விழிப்புணர்வு முகாம் குத்தபாஞ்சான் ஊராட்சி ஆழ்வான்துலுக்கபட்டி கிராமத்தில் ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் அறிவழகன்
அறிவுரையின்படி நடைப்பெற்றது .

இவ்விழிப்புணர்வு முகாமின் துவக்கமாக உதவி வேளாண்மை அலுவலர் புஷ்பமாரி விவசாயிகளை வரவேற்று பேசினார்கள்

துணை வேளாண்மை அலுவலர் முருகன் துறையின் மூலம் வழங்கப்படும் பண்ணை கருவிகள் தொகுப்பு, மின் கலம் மூலம் இயங்கும் தெளிப்பான் போன்ற மானிய திட்டங்கள் குறித்து விவரித்து பேசினார்கள்.

வேளாண்மை அலுவலர் சண்முகப்பிரியா தென்னையை தாக்கும் நோய் மற்றும் பூச்சிகள் குறித்தும் அவற்றின் மேலாண்மை குறித்தும் விவரித்து பேசினார்கள்.

இம்முகாமில் தென்னையை தாக்கும் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்த துண்டு பிரச்சுரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

இவ்விழிப்புணர்வு முகாமில் உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்டேன்லி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *