மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் விதத்தில் பேசும் திமுக, காங்கிரஸ் கட்சியினர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும- அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தல்.
காரைக்கால் மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்தவும், காவிரியின் கடைமடைப்பகுதியான காரைக்கால் மாவட்டத்தில் கடலில் கலக்கும் உபரி நீரை தேக்கி வைக்கவும் சுமார் 70 ஏக்கர் நிலத்தில் ஒரு செயற்கை ஏரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது. அந்த செயற்கை ஏரியின் மூலம் காவிரியின் உபரி நீரை தேக்கி வைத்து அதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டது. கடந்த திமுக,காங்கிரஸ் ஆட்சியில் ஜிப்மர் நிர்வாகம் மற்றும் ரயில்வே துறைக்கும் மண் எடுப்பதற்காக அங்குள்ள ஏரியை ஆழப்படுத்தி ஒரு லோடுக்கு 150 ருபாய் அளவில் பெர்மிட் போடப்பட்டது. எங்களது கூட்டணி ஆட்சி வந்த பிறகு 3 யூனிட் மண் எடுப்பதற்கு 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
ஏரியை ஆழப்படுத்த அந்த மண்ணை எடுத்து ரயில்வே பணிக்கு பயன்படுத்தும் திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்தார். அந்த திட்டத்தில் தற்போது பல கோடி ரூபாய் ஊழல் நடந்து வருகிறது. அந்த இடத்தில் 30லிருந்து 40 அடி வரை பெரிய ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண்ணை நோன்டி வருகின்றனர். இதனால் ஆற்று மணல் கிடைக்கிறது. ஆற்று மணலின் விலை 3 யூனிட் 17 ஆயிரம் ரூபாய் தற்போது உள்ளது. அதை பெர்மிட் என்ற முறையில் வெறும் 1000 ரூபாய்க்கு கொடுக்கினற்னர். இதில் மிகப்பெரிய கொள்ளை நடைபெற்று வருகிறது. காரைக்கால் நல்லம்பள்ளி ஏரியில் காரைக்கால் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பலர் ஈடுபட்டுள்ளனர். இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கக்கூடிய ஒரு அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர்கள் அவர்கள் மண் வாரப்படுவது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். மண் எடுப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இதில் அரசியல் வாதிகளுக்கு உரிய கமிஷன் கொடுக்கப்படுகிறது. பெரிய அளவில் மணல் ஊழல் நடந்து வருகிறது.
உடனடியாக முதலமைச்சர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோர் இதில் தலையிட்டு காரைக்கால் மாவட்ட ஆட்சியர், நீர்பாசன துறை அதிகாரிகளை அழைத்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டு இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
அப்படியில்லை என்றால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை ஓன்றுதிரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும். மேலும் ஓபன் டெண்டர் விட்டு அதனை கண்காணிக்க காரைக்கால் மாவட்ட ஆட்சியரை நியமிக்க வேண்டும்.
இந்த 20 மாத கால ஆட்சியில் முதலமைச்சர் ரங்கசாமியால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் 70 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். அப்படி இல்லை என்று கூறும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி என்னுடன் ஒரே மேடையில் இதுகுறித்து விவாதிக்க தயாரா?
கடந்த 5 ஆண்டுகளில் நாராயணசாமி ஒரு புதிய திட்டத்தை கூட செயல்படுத்தவில்லை.
அமைதியாக இருக்கும் புதுச்சேரி மாநிலத்தில் இந்த 2 மணி நேரம் பணி தளர்வின் போதும், முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு ஏன் அறிவிக்கவில்லை என கூறி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மத கலவரத்தை தூண்டுகிறார். உண்மையில் அரசு துறையில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் 2 மணி நேரம் பணி தளர்வை அரசு அறிவித்துள்ளது. இதுபோன்று மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் விதத்தில் பேசும் திமுக, காங்கிரஸ் கட்சியினர் மீது தேசிய பாதுகாப்பு. சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.