புதுச்சேரி அரசு உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தவளக்குப்பம் ராஜீவ் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் டிசிஎஸ் நிறுவனம் மாணவர்களுக்கு கட்டணமில்லா திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தவக்குப்பத்தில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் முன்னிலையில் நடைபெற்றது.
உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனர் திரு ருத்ரகவுடு மற்றும் டி சி எஸ் நிறுவனம் சார்பாக தாமஸ் சாக்கோ ஆகியோர் கையெழுத்துட்டு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் ஹண்ணா மோனிஷா வரவேற்புரை வழங்கினார். சட்டப்பேரவை தலைவர் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் டிசிஎஸ் நிறுவன அதிகாரி சொப்னா சக்கரவர்த்தி ராஜீவ் காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியை திருமதி ரத்னா பவானி. நாராயணன் மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *