ஊசுடு தொகுதியை சேர்ந்த கூடப்பாக்கம் தாமரைக்குளம் பகுதியில் குடிநீர் தேக்க தொட்டி வளாகத்தில் பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கூட்டம் சார்பில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
ரூ.10.62 லட்சத்தில் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியாளர் துவக்க விழாவில் அமைச்சர் சாய் சரவணகுமார் கலந்துகொண்டு சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் இருந்து ஊசுடு தொகுதிக்கு உட்பட்ட அகரம், பத்துகண்ணு மற்றும் சேந்தாநத்தம் ஆகிய பகுதி பொதுமக்கள் பயனடைய உள்ளார்கள். 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன் ஒன்றுக்கு ரூ.7 வீதம் பொது மக்களுக்கு அளிக்கப்படும்.இந்த ஆரேவாட்டர்நிலையத்தில் நாளொன்றுக்கு 8000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி செய்யக்கூடிய நிலையில் உள்ளது. நிகழ்ச்சியில் கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர் பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம் உதவி பொறியாளர் வாசு இளநிலை பொறியாளர் வெங்கடேஷ் மற்றும்தொகுதி தலைவர் சாய் தியாகராஜன், துணைத்தலைவர் அய்யனார், குடிநீர் பொறுப்பாளர் பாலு, கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், உட்பட ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *