மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் கிராமத்தில் இந்து மக்கள் கட்சி மற்றும் கிராம இளைஞரணி சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இந்து மக்கள் கட்சியின் புறநகர் மாவட்ட தலைவர் துரைப்பாண்டி, புறநகர் மாவட்ட செயலாளர் சிங்கராஜ், தென்னிந்திய இளைஞரணி குருநாதன், சோழவந்தான் தொகுதி தலைவர் பெரியஊர்சேரி பூமிநாதன், இளைஞர் அணி பால்ராஜ், உள்பட இளைஞர் அணி நிர்வாகிகினரும் கலந்து கொண்டனர்.