மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சின்ன திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் அச்சிறுபாக்கம் ஸ்ரீ வஜ்ரகிரி மலையில் அமைந்துள்ள அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் கோயிலில்மாதந்தோறும் ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் கிரிவல குழு சார்பாக நடத்தப்படும் பௌர்ணமி கிரிவலம் ஆனது நேற்று சித்ரா பௌர்ணமி யெட்டி வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5 மணி அளவில் அச்சிறுபாக்கம் வஜ்ரகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வஜ்ரகிரி வழிவிடு விநாயகர் ஆலயத்தில் உலக மக்கள் நன்மைக்காகவும்,வேத மந்திரங்கள் ஒலிக்க, திருவாசகம், திருப்பதிகம் பாடி, ஸ்ரீ வஜ்ரகிரி மகான் வடபாதி ஆதீனம் சித்தர் சுவாமிகள் தலைமையில், தவத்திரு.காஞ்சிபுரம் பவானி சங்கர் சுவாமிகள், தவத்திரு. இலங்கை சித்தர்அம்மா சுவாமிகள்,தவத்திரு. தில்லை அம்பல மகா மந்திர குருஜி, ஸ்ரீ சாய் சாம்ப சிவம் சுவாமிகள், முன்னிலையில் சிவ கைலாய வாத்தியங்கள் முழங்க, மகா தீபாராதனை காண்பித்து சித்தர்களின் திருக்கரங்களால்
சித்ரா பௌர்ணமி கிரிவலம் ஆனது தொடங்கி வைத்தனர்.


இவ்விழாவில் வந்திருந்த அத்தனை பக்தர்களுக்கும், சிவனடியார்களுக்கும் பொதுமக்களுக்கும் திருநீறு அணிவித்து அனைவருக்கும் அருளாசி வழங்கினார்கள்.அச்சிறுப்பாக்கம் கிரிவலம் குழு சார்பாக வழங்கப்பட்ட ரக்ஷ கயிறு அணிவிக்கப்பட்டது.

இந்த கிரிவலத்தில் ஆகாச சொர்ண பைரவர் சுவாமி விசேஷ அலங்காரத்துடன் வஜ்ரகிரி மலையை கிரிவலம் வர, சீதாபுரம் கிராமத்தில் பூசை ஆட்சி லிங்கம் அவர்கள் ஏற்பாட்டில் சிவலிங்கம் நிறுவப்பட்டு18 சித்தர்கள் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. சுவாமியை தொடர்ந்து, சென்னை, பாண்டிச்சேரி செங்கல்பட்டு, வந்தவாசி கும்பகோணம், திண்டிவனம், மதுராந்தகம், அச்சிறுபாக்கம்
உட்பட்ட அனைத்து ஊர்களில் இருந்து வந்திருந்த பொதுமக்களும், சிவனடியார்களும், இந்து உதவி மைய நிர்வாகிகள், தமிழ் சேவா சங்கத்தின் மாநில நிர்வாகிகள், வள்ளலார் சுத்த சன்மார்க்கத்தை சேர்ந்த அடியார்களும், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சேர்ந்த அடியார்களும், தென்னிந்திய இந்து திருக்கோயில் கூட்டமைப்பு மாநில மாவட்ட, நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அத்தனை அடியார்களுக்கும் சிறப்பான அன்னதானம் ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் கிரிவலம் சார்பாக வழங்கப்பட்டது. பௌர்ணமி கிரிவல நிகழ்ச்சியில்
ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் கிரிவல குழு பொறுப்பாளர் அச்சிறுபாக்கம்எஸ்.செல்வம், கிரிவல குழு தலைவர் பிரிங்கி மலை மு.சரவணன், கலந்துகொண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.இதில், தமிழ் வேல், திருநாவுக்கரசு, வெற்றிச்செல்வன், நங்கநல்லூர் வேதகிரி, பசு பாதுகாப்பு இயக்கத் தலைவர் சத்யநாராயண சாஸ்திரி, அருள்மொழி, பிரிங்கிமலை. ராமசுப்பிரமணி,கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *