பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராமானுஜபுரம் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் தீபக் தலைமையில் மருத்துவ குழுவினர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள்.
இம் முகாமில் மருத்துவமில்லா மேற்பார்வையாளர் தியாகராஜன், சுகாதார ஆய்வாளர் நாடிமுத்து, பகுதி சுகாதார செவிலியர் முத்துமாலை, கிராமபுற சுகாதார செவிலியர் ஜெயந்தி, இல்லம் தேடி மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.