தென்காசி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் சார்பில் தென்காசியில் முதன்முதலாக மெகா இயந்திரங்கள் மற்றும் வர்த்தக கண்காட்சி 2023 இலஞ்சியில் குற்றாலம் – மதுரை மெயின்ரோட்டில் ஸ்ரீசாரதாம்பாள் கிராண்டில் தொடங்கியது.

மெகா இயந்திரங்கள் வர்த்தக கண்காட்சி திறப்பு விழாவில் தென்காசி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கத் தலைவர் அன்பழகன் வரவேற்புரை வழங்கினார். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார், வாசுதேவநல்லூர் சட்டமன்றஉறுப்பினர் சதன் திருமலைக்குமார்
ஆகியோர்முன்னிலை வகித்தனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் மற்றும் ஷோகோ நிறுவனர் பத்மஸ்ரீ ஸ்ரீதர்வேம்பு ஆகியோர் கண்காட்சியை திறந்துவைத்தார்

விழாவில் தொழில் முனைவோர் மற்றும் புதிய தொழில் முனைவோர்களுக்கான அரசு துறைகள் மற்றும் வங்கியாளர்களுடன் தொழில் சம்மந்தமான கேள்வி பதில் நடைபெற்றது. புதிய தொழில் முனைவோர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட புதிய தொழில் யுக்தி பேச்சு போட்டி நடைபெற்றது. விழாவில் தொழில் அதிபர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர்கள், புதிய தொழில் முனைவோர்கள், வர்த்தகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *