பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
திருவாரூர் மாவட்ட தொமு ச மாவட்ட கவுன்சில் பொருளாளர் வேண்டுகோள்பெற்றோர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் சில நினைவூட்டல் மற்றும் வேண்டுகோள்

இன்று வெளியாகுவது தேர்வு முடிவுகள் தானே தவிர உங்கள் வாழ்வின் முடிவல்லஎனவே எந்த சூழலிலும் நம்பிக்கை இழக்க வேண்டாம்ஒருவேளை சில பாடங்களில் தேர்ச்சி பெற தவறினாலும் மிக விரைவில் துணைத்தேர்வுகள்
அறிவிக்கப்படும்அதில் வெற்றி பெற்று இந்த கல்வி ஆண்டிலேயே கல்லூரியில் சேர்ந்து விடலாம்எக்காரணம் கொண்டும் யாரையும் உங்களுடன் ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள்அதேபோல் குறைந்த மதிப்பெண் பெற்ற யாரையும் தரக்குறைவாக எண்ண வேண்டாம்

அன்பார்ந்த பெற்றோர்களுக்குதேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் மாணவ மாணவிகள் உச்சபட்ச உணர்ச்சி நிலையில் இருப்பார்கள் என்பதால் எந்த சூழலிலும் உங்கள் குழந்தை எத்தனை மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் தயவு செய்து எதிர்மறையான உணர்வை காயப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தி விட வேண்டாம்

குறிப்பாக உங்களின் உறவினர்நண்பர்கள் பக்கத்து வீட்டு மாணவர்களின் மதிப்பெண்களை உங்கள் குழந்தையின் மதிப்பெண்களோடு ஒப்பீடு செய்யாதீர்கள்

அதனால் எந்த பயனும் இல்லை என்பதோடு மனக்கவலை மட்டுமே மிஞ்சும்இறைவன் அருளால்அனைவரும் வெற்றி பெற எல்லாம் இறைவனை நெஞ்சார பிரார்த்திக்கிறேன் என திருவாரூர் தொமுச மாவட்ட கவுன்சில் பொருளாளர் பா தமிழரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *