அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள 15 பி மேட்டுப்பட்டி ஊராட்சியில் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்று இரண்டாம் ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தலைமை தாங்கினார் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், முன்னிலை வகித்தார், இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் திமுக மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஒன்றிய செயலாளர்கள் தனராஜ்,பரந்தாமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், விவசாய அணி இடையப்பட்டி நடராஜன், ஒன்றிய துணைச் செயலாளர் அருண்குமார், நகரச் செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல்பாண்டியன்,பேரூராட்சி மன்ற தலைவர்கள் ரேணுகாஈஸ்வரிகோவிந்தராஜ், சுமதிபாண்டியராஜன், பால்பாண்டி, ஒன்றிய துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர்கள் தண்டலை சரவணன், தங்கதுரை, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மருதுபாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வடுகப்பட்டிபாலமுருகன், செந்தில்குமார், நித்யாபழனிநாதன், சத்யாசெந்தில்குமார், ஜெயமாலா பாலமுருகன், மாலைபட்டி சக்திமுருகன், மற்றும் முடிவார்பட்டி சுந்தர், கோட்டைமேடு ராஜாஜி, முன்னாள் நகரச் செயலாளர் வாடிப்பட்டி பிரகாஷ், ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் கார்த்திகேயன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தானகருப்பு, மாணவரணி அமைப்பாளர்கள் பிரதாப், யோகேஷ், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தவசதிஷ், சிறுபான்மை அணி அமைப்பாளர் அக்பர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.