மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பண்ணைகுடி கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி மீண்டும் மலைக்கு செல்லும் நாளில் மாபெரும் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
இந்த அன்னதான விழாவில் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பண்ணைகுடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.