திருவாரூர்
தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திருவாரூர் மாவட்டம்குடவாசல் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடத்தினை திறந்து வைத்தார்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக சென்னையிலிருந்து திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடத்தினை திறந்து வைத்தார்கள்புதிய அலுவலக கட்டடத்தில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ குத்துவிளக்கேற்றி வைத்தார்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டாரம் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்ட நிதியின் கீழ் ரூ.317.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் இன்றைய தினம்10.05.2023 வைக்கப்பட்டுள்ளது
அலுவலக கட்டடத்தில் தரைதளம் 8216 சதுர அடி பரப்பளவிலும்முதல் தளம் 8216 சதுர அடி பரப்பளவிலும் போர்டிகோ 895 சதுர அடி பரப்பளவிலும் என 17327 சதுர அடிப்பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது
தொடர்ந்துஅனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களின் பயன்பாட்டிற்காக புதியதாக வழங்கப்பட்ட வாகனத்தின் சாவியினை ஒன்றியக்குழுத்தலைவர்களிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா ஒன்றிய குழு தலைவர்கள் (குடவாசல் கிளாரா செந்தில் (நீடாமங்கலம்) செந்தமிழ்செல்வன் (மன்னார்குடி) சேரன் குளம் டி. மனோகரன் (கோட்டூர்) மணிமேகலை முருகேசன் (திருத்துறைப்பூண்டி) பாஸ்கர்மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாப்பாசுப்ரமணியன்குடவாசல் ஒன்றியக்குழு துணைத்தலைவர் எம் ஆர் சண்முகா என்ற தென்கோவன் குடவாசல் வட்டாட்சியர் குருநாதன் ஒன்றியக்குழு உறுப்பினர்கள்வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *