எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் 16 கோடியில் பேரிடர் மீட்பு மையங்கள் அமைய உள்ள இடத்தினை சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று ஆய்வு செய்தார் இதனை எடுத்து அங்கிருந்து அமைச்சர் சென்றபோது சாலையோரம் காத்திருந்த அனுமந்தபுரம் கிராம மக்கள் தங்களுக்கு தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர்

அவர்களுக்கு வழங்கப்பட்ட அரிசியை வாங்கி ஆய்வு செய்த அமைச்சர் குறிப்பிட்ட நியாய விலை கடைக்கு நேரடியாக சென்றார் அங்கே பொது மக்களுக்காக வழங்க வைக்கப்பட்டிருந்த அரிசியை பார்வையிட்டு அதன் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தரமற்ற அரிசியை ஏன் மக்களுக்கு வழங்கினார்கள் என கடையின் பணியாளரிடம் அமைச்சர் மெய்ய நாதனும் மாவட்ட ஆட்சியர் மாகபாரதி கேள்வி எழுப்பினர், மேலும் தரமற்ற அரிசிகளை இனிவரும் காலங்களில் வழங்கக் கூடாது எனவும் தரமான அரிசியை மட்டுமே பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் நியாயவிலைக் கடையை ஊழியரை எச்சரித்து அறிவுறுத்தினர்.

இந்த ஆய்வின்போது பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *