பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் லண்டன்.ஆர்.அன்பழகனின் மனைவி கவிதா அவர்கள் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கட்சியில் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைச்சென்று வாழ்ந்து உயிர்நீத்த மூத்த முன்னோடிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 10,000 நிதி உதவி மற்றும் 25 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் லண்டன்.ஆர்.அன்பழகன் தலைமையில் தரங்கம்பாடி அருகே கொட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம், தரங்கம்பாடியைச் சேர்ந்த சுந்தர்,சீர்காழி அருகே ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜா ராமன், பொய்கை வளர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகன், கோவாஞ்சேரியை சேர்ந்த செல்வம் உள்ளிட்ட கட்சியின் மூத்த முன்னோடிகள் ஐந்து நபர்களின் குடும்பத்தினரிடம் தலா பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் அரிசி உள்ளிட்ட உதவிகளை நேரில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ராமதாசு கல்வி அறக்கட்டளை தலைவர் எஸ்.ஏ.ஐயப்பன், முன்னாள் சமூக முன்னேற்ற சங்க மாநில தலைவர் பேராசிரியர் .கோ.சு.மணி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பாக்கம். சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் தேனூர்.ரவிச்சந்திரன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பாலதண்டாயுதம் மாவட்ட துணை செயலாளர் குட்டிமணி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *