பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கோரிக்கையை ஆர்ப்பாட்டம் வட்டத் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கிராம உதவியாளர்களுக்கு சிறப்பு காலம் வரை ஊதியத்தை ரத்து செய்து வரையறுக்கப்பட்ட காலம் வரை ஊதியம் வழங்குதல் மற்றும் அரசு ஆணை எண் 33 நிரந்தரமாக ரத்து செய்வது குறித்தும் மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு நிதியை மீண்டும் வழங்கிட வேண்டியும் சிபிஎஸ் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களையக் கோரியும் மற்றும் பல்வேறு பதினைந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில மகளிர் அணி செயலாளர் சுகுணா முன்னிலை வைத்தார் மாவட்டத் துணைத் தலைவர் ராஜேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார் இந்த கோரிக்கையை ஆர்ப்பாட்டத்தில் 15 க்கு மேற்பட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக வட்டத் துணைத் தலைவர் தீபிகா நன்றி உரையாற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *