தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாருமான எடப்பாடி திரு கே பழனிசாமி அவர்களின் பிறந்தநாள் விழா அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகள் தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்..
அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அதிமுக நகரக் கழகத்தின் சார்பில் நகர கழக செயலாளர் எம். பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் முன்னாள் தமிழக சத்துணவு மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் மாநில மகளிர் அணி இணைச் செயலாளருமான டாக்டர் வெ.சரோஜா, அவர்கள் முன்னிலை

ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மன் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பல்லாண்டு வாழ சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் செய்து கழக நிர்வாகிகள் வழிபட்டனர்.
தொடர்ந்துஸ்ரீ எல்லை மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பால முருகனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாரணை காட்டப்பட்டது.

மேலும் கோவிலுக்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும், மற்றும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் முன்னாள் தமிழக சத்துணவு மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் மாநில மகளிர் அணி இணைச் செயலாளருமான டாக்டர் வெ.சரோஜா, நகரக் கழக செயலாளர் எம். பாலசுப்பிரமணியம் ஆகியோர் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.

இந்த கோவில் சிறப்பு பூஜையில் மாவட்ட அவைத் தலைவர் கந்தசாமி, நகர பொருளாளர் வெங்கடாசலம், வழக்கறிஞர்கள் பூபதி, பிரபு, பிள்ளா நல்லூர் செயலாளர் பழனிச்சாமி, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் தங்கம்மாள் பிரகாசம், மாவட்ட பிரதிநிதி முன்னாள் கவுன்சிலர் ஆர்.பி. சினிவாசன், ராசிபுரம் நகர மன்ற உறுப்பினர்கள் மகாலட்சுமி ஆராயி,முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதர், பரமேஸ்வரன், ரமேஷ் அமுல்ராஜ், ஆர்பி. ஜெகன்,ஆர்.எஸ். பாஸ்கர், பெரியசாமி, மற்றும் வார்டு செயலாளர்கள் அச்சகம் சரவணன், செல்லமுத்து, ஆர்வி குமார், சர்தார், ராஜமாணிக்கம், ஆடிட்டர் பழனிசாமி, சிவராஜ், மேலும் ஆறுமுகம், கவுண்டம்பாளையம் முத்துசாமி, முன்னாள் 50000 கவுன்சிலர் முருகேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் என பலர் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *