தேனி,தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 12ம் தேதி 69 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே .பழனிச்சாமியின் 69வதுபிறந்தநாளை பெரியகுளம் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, காந்தி சிலை,பழைய பேருந்து நிலையம் வளாகம்,அரண்மனை தெரு வள்ளுவர் சிலை ஆகிய இடங்களில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அதிமுக அமைப்பு செயலாளர் ஜக்கையன் வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அன்னபிரகாஷ் ஆகியோர் வழிகாட்டுதல்படி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர பொறுப்பாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். உடன் பெரியகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியவீரன், ராஜாங்கம் , தேனி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் தவமணி, அவைத்தலைவர் கோம்பையன், மனோகரன், ஜெயசீலன், வெங்கடேஷ், கணேஷ், சரவணன், அண்ணா தொழிற்சங்கம் கமலக்கண்ணன், இலக்கியன் ,ராம்ஜி, ரஞ்சித்ராவ், கழக வார்டு செயலாளர்கள் பொன்னுத்துரை, பிரபாகரன், சண்முகம், பால்பாண்டி, வெங்கடேசன், குருசாமி, துரைப்பாண்டி, பாலகிருஷ்ணன், பெருமாள், பழனிவேல், சென்றாயன், ஜெகதீசன், முருகேசன் , சுரேஷ், தமிழ் , விஜய் ஆனந்த், நாகேந்திரன், சண்முகம், சிராஜுதீன், முத்துமணி மற்றும் மகளிர் அணி முருகேஸ்வரி ,அமுதா, மகாலட்சுமி, செந்தில்குமாரி , திவ்யாமுத்துசீலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *