மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்

வணிகர் நல வாரியத்தால் சில்லறை வணிகர்கள் பயன்பெறும் வகையில் உதவி தொகைகளை உயர்த்தி விதிகளை எளிமைப்படுத்தி வணிகர் நல வாரியம் சீரமைக்கப்பட வேண்டும் நீடாமங்கலம் வணிகர் சங்கம் வலியுறுத்தல் .

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் நீடாமங்கலம் வணிகர் சங்கம் சார்பில் வணிகர் தினம் பொதுக்குழு கூட்டம், மூத்த வணிகர்களுக்கு வணிக மாமனி விருது வழங்கும் என முப்பெரும் விழா அதன் தலைவர் நீலன் அசோகன் தலைமையில் நடைபெற்றது .

இதில் தமிழ்நாடு வேளாண் இடுபொருட்கள் விற்பனையாளர் சங்கத் தலைவர் மோகன், தஞ்சை மாவட்ட வணிகர் சங்க நிறுவன தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.. பொதுக்குழுவில், காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய உரிய நடவடிக்கை மேற்கொண்டதற்கும் 12 மணி நேர வேலை திட்டம் மசோதாவை ரத்து செய்வதாக அறிவித்தமைக்கும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தும் நீடாமங்கலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மேம்பாலம் கட்டும் பணியினை விரைவாக செயல்படுத்த வேண்டும். வணிகர் நல வாரியத்தால் சில்லறை வணிகர்கள் பயன்பெறும் வகையில் உதவி தொகைகளை உயர்த்தி, விதிகளை எளிமைப்படுத்தி வணிகர் நல வாரியம் சீரமைக்கப்பட வேண்டும்.

வணிகர் நல வாரியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என வலியுறுத்தியும், தமிழகத்தில் மின் உபயோக கணக்கெடுக்கும் பணியை மாதம்தோறும் மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *