தமிழக முதலமைச்சருக்கும் பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய தலைவர் நீதி அரசர் பாரதிதாசன் ஆகியோருக்கு திண்டிவனத்தில் வன்னியர்களுக்கு தனியாக 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர பாமக சார்பில் 2000 கடிதங்கள் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
திண்டிவனம் நகர பாமக நகர செயலாளர் பூதேரி ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற கடிதங்கள் அனுப்பும் போராட்டத்தில் வன்னியர்களுக்கு தனியாக 10.5% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நகரில் உள்ள மாநில வன்னியர் சங்கம் அலுவலகத்தில் இருந்து நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று மேம்பாலம் அருகே உள்ள தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் உள்ள தபால் பெட்டியில் சுமார் 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய தலைவரான நீதி அரசன் பாரதிதாசன் ஆகியோருக்கு அனுப்பி வைக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் ,மாவட்டத் தலைவர் பாவாடை ராயன்,முன்னாள் மாநிலத் தலைவர் N.M.கருணாநிதி,முன்னாள் மாவட்ட செயலாளர் இரா. சம்பத்,மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ஆறுமுகம்,வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் நொளம்பூர் முருகன்,மாவட்டத் துணைச் செயலாளர் சலவாதி சேகர்,வன்னியர் சங்க நகர செயலாளர் பூதேரி ரவி, நகர செயலாளர் சண்முகம்,பாமக நகர மன்ற உறுப்பினர் மணிகண்டன்,மகளிர் அணி பொன். மகேஸ்வரி,நகர இளைஞரணி செயலாளர் பிரசாந்த்,நகர மாணவரணி செயலாளர் மற்றும் பாமக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.