எஸ்.செல்வகுமார் செய்தியாளர்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள தைக் கால் கிராமம் ஜின்னா தெருவை சேர்ந்த அஹமதுஅப்ரார்(11). அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் தைக்கால் பகுதியைச் சேர்ந்த மற்ற 3 சிறுவர்களுடன் சென்று கொள்ளிடம் அருகே சரஸ்வதிவிளாகம் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்கொண்டிருந்தார்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் மூழ்கினார். அவர்களுடன் குளித்துக் கொண்டிருந்த மற்ற சிறுவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் கிராமத்து இளைஞர்கள் கொள்ளிடம் ஆற்றில் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சிறுவன் அகமதுஅப்ரார் உடல் குளித்த இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *