எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கோடைகால பயிற்சி வகுப்புகள் ஸ்ரீ ஆஸ்ரம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ராசிபுரம் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த கோடைகால பயிற்சி வகுப்புகளில் எட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நஞ்சாக், சிலம்பம், துப்பாக்கி சுடுதல், ஸ்கேட்டிங், வில்வித்தை பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சி வகுப்புகள் சிறப்பாக நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்புகளில் சிறப்பாக பயிற்சி பெற்ற 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ராசிபுரம் வித்யா மந்திர் பள்ளி செயலாளர் இன்ஜினியர் மாணிக்கம், வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் பயிற்சியாளர்கள் வி. சரவணன், மாணிக்கம் பன்னீர், பிரபு, பத்மநாபன் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்..