திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அத்திப்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா புத்தாக்க பயிற்சி வானவில் மன்றம் சார்பில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பான செயல்பாடுகளை எளிதாக செய்யக்கூடிய வகையில் பல்திறன் சார்ந்த செயலாக்க கருத்துக்கள் வழங்கப்பட்டது.

மேலும் காகித மடிப்பு கலை பயிற்சி, கைரேகை பதிவு வரைபடங்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை வி. சாந்தி, வானவில் மன்ற கருத்தாளர் நிவேதிதா, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், எய்டு இந்தியா திட்ட மேற்பார்வையாளர் க‌. முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.

கோடைக்கால இத்தகைய செயல்பாடுகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *