கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம், பெண்ணேஸ்வரமடம், குருபரப்பள்ளி, காமன் தொட்டி, பாகலுார், மற்றும் சூசூவாடி ஆகிய 5 துணை மின் நிலையங்களை ரூ.27 கோடியே 28 இலட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் திறன் மின்மாற்றிகளின் தரம் உயர்த்தியும், கூடுதல் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளதை காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், பெண்ணேஸ்வரமடம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செ.ராஜேஸ்வரி அவர்கள் குத்துவிளக்கேற்றி, மின் இயக்கத்தை துவக்கி வைத்தார். உடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தலைமை பொறியாளர் (வேலூர் மண்டலம்)
ஞான பெட்ஷீபா, மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி, செயற்பொறியாளர்கள்.பழனி.பவுன்ராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *