கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், ஊணாம்பாளையம் கிராமத்தில், தமிழ் மாநில மக்கள் கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர் பேரவையின் கிளை திறப்பு விழா நடைபெற்றது.

மாவட்ட பொருளாளர் U.R.மாது அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

கெளரவத் தலைவர் கணேச மேஸ்திரி தலைமை தாங்கினார்.

கிளைத் தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் காமராஜ், துணைச் செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் ஜி.பழனிச்சாமி, சங்க காப்பாளர் இராஜா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

மாநிலத் தலைவர் டாக்டர்.T.R.கவியரசு மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் V.M.மாது ஆகியோர்
தொழிற்சங்கத்தின் பெயர் பலகை திறந்து வைத்து,கொடியேற்றி சிறப்புரையாற்றினார்கள்.

மாநிலத் துணைத் தலைவர் எம்.சி.அசோக் அவர்கள் துவக்கயுரையாற்றினார்.

ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சுமி சஞ்சீவ் காந்தி மற்றும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கார்த்திகா சதாசிவம் ஆகியோர்கள் இவ்விழாவினை துவக்கி வைத்தனர்.

இவ்விழாவில்,
தொழிற்சங்கத்தின் பெயர் பலகை திறந்து வைத்து, கொடியேற்றி வைத்து,பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள்,நாட்டு மரக்கன்றுகள் வழங்குதல், இனிப்புகள் மற்றும் தொழிலாளர் நலவாரியத்தின் அடையாள அட்டைகள், அரசு ஓய்வூதிய அட்டைகள் வழங்குதல் ஆகியன மிகச் சிறந்த முறையில் நடைபெற்றது.

இவ்விழாவில்,
மாவட்ட இணைச் செயலாளர் சீனிவாசன், ஒன்றியத் தலைவர் சண்முகம், மாவட்ட பொருளாளர் மாது, மாவட்டத் துணை தலைவர் இரமேஷ், ஒன்றியச் செயலாளர் குமரவேல், அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் இரா.சுரேஷ், தர்மபுரி மாவட்டச் செயலாளர் கிஷோர்,சங்க காப்பாளர் முனியப்பன், ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சுகந்தி முருகன் உள்ளிட்ட மண்டல மாவட்ட கிளை பொறுப்பாளர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள், பெண்கள்,இளைஞர்கள் பள்ளி மாணாக்கர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு இவ்விழாவினைச் சிறப்பித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *