நாமக்கல்

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு
நாமக்கல் தெற்கு மாவட்ட மாணவரணி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை எளிய மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் விழா நடைபெற்றது

நாமக்கல் அருள்மிகு நரசிம்ம சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்த நாமக்கல் மாவட்ட புதிய ஆட்சி தலைவர் டாக்டர் எஸ் உமா சாமி தரிசனம் செய்துவிட்டு அடுத்து அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய செல்லும் வழியில் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்ததால் விஜய் மக்கள் இயக்கம் நடத்திய இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ். உமா கலந்து கொண்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு உணவு வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் தெற்கு மாவட்ட மாணவர்அணி விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் ஜி. தனவேந்தன் , ஆர். ஆர். பி. பாலன், திலீப்குமார், சூரியா, சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *