நாமக்கல்
நாமக்கல்லில் 28/1, தரைத் தளம், ஶ்ரீ கிருஷ்ணா காம்ப்ளக்ஸ், பரமத்தி ரோடு, எஸ்.பி.புதூர், நாமக்கல் என்ற முகவரியில் இயங்கி வந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் (NECC) நாமக்கல் மண்டல அலுவலகம் 01.06.2023 முதல் நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் சுப்புலட்சுமி மஹால் அருகில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் எதிரில் கனரா வங்கி மண்டல அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் வார்டு-A, பிளாக்- 9, T.S.No.17/10, 4139, 102 A, திருச்செங்கோடு மெயின் ரோடு, நாமக்கல் என்ற முகவரியில் மாற்றப்பட்டுள்ளது
இந்த புதிய இடம் மாற்றம் செய்யப்பட்ட அலுவலகத்தையும்
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் (NECC)
கூட்ட அரங்கையும் தமிழ்நாடு கோழிப் பண்ணை உரிமையாளர் சங்கத்தின் தலைவரும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல துணை தலைவருமான கே சிங்கராஜ் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஏராளமான முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
புதிய அலுவலகம் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் உதவி பொது மேலாளர் வி எஸ் பாலசுப்பிரமணியம் மேற்பார்வையில் செய்திருந்தார்