இலை ! கவிஞர் இரா .இரவி !


மரத்தில் இருக்கும்வரை
மரணம் இல்லை !
மரம் விட்டு உதிர்ந்ததும்
மரணம் தொடங்கும் !
உதிர்வதுண்டு தானாகவும்
உதிர்ப்பதுண்டு காற்றும் !
நிலத்திலும் விழுவதுண்டு
நீரிலும் விழுவதுண்டு !
நெருப்பிலும் விழுவதுண்டு
நெஞ்சம் கனப்பதுண்டு !
சிலர் பறித்தும் பிரிவதுண்டு
சிந்திக்காமலும் பிரிவதுண்டு !
ஆணவத்திலும் பிரிவதுண்டு
அன்பின்றிப் பிரிவதுண்டு !
இலை என்ற பெயரும்
இனி சருகு என்றாகும் !
உருக்குலைந்து போகும்
உரமாகவும் மக்கும் !
பெற்றோருடன் வாழும் வாழ்க்கை
பாதுகாப்பானது என்றும் !
பிரிய நேர்ந்தாலும்
பாசம் காட்டி வாழுங்கள் !
மரம் இன்றி இலை இல்லை
பெற்றோர் இன்றி பிள்ளை இல்லை !

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *